ஏகாதிபத்திய இன அழிப்பு முறையை கண்டித்து தெருமுனை கூட்டம்

சமூக நீதிக் கூட்டமைப்பு சார்பில் ஏகாதிபத்திய இன அழிப்பு முறையை கண்டித்து தெருமுனை கூட்டம்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு சனி சந்தை அருகே, சமூகநீதி கூட்டமைப்பு சார்பில் சர்வதேச ஏகாதிபத்திய இன அழிப்பு முறையை கண்டித்தும், இந்திய ஒன்றிய பாஜக அரசின் இன ஒடுக்கு முறையை கண்டித்தும், தமிழ்நாட்டில் தொடரும் சாதிய ஒடுக்கு முறைக்கு எதிராகவும் கண்டன தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சிறுபான்மையினர் நலக்குழு மாவட்ட செயலாளர் ஏ.அசன் தாங்கினார்.. இந்த நிகழ்வில் சிபிஐ எம்எல் வெங்கடேசன், இடது சிந்தனையாளர் நடுவம் குமரேசன், கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட தலைவர் மாரியப்பன் , திராவிடர் விடுதலை கழக மாவட்ட செயலாளர் மு.சரவணன், மாவட்ட அமைப்பாளர் முத்து பாண்டி, மதிமுக நகரச் செயலாளர் ரமேஷ், புரட்சிகர இளைஞர் முன்னணி மாணிக்கம், சிபிஐ எம்.எல். மாவட்ட செயலாளர் பொன்.கதிரவன், கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் புகழேந்தி, சிபிஐ எம்எல் ரெட் ஸ்டார் சக்திவேல், கம்யூனிஸ்ட் கட்சி மாநில தலைவர் கோவிந்தராஜ், திராவிட கழகம் பொன்னுசாமி, மதிமுக மாவட்ட துணைச் செயலாளர் சிவக்குமரன் ,மதிமுக மகளிர் அணி அமைப்பாளர் கண்ணம்மா ஜெகதீசன் , புரட்சிகர இளைஞர் முன்னணி எழில்,சிஐடியு தொழிற்ங்க மற்றும் நிறைவுறையாக இடதுசாரி சிந்தனையாளர் நடுவோம் பெ.ராஜாராம் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியனர்..பல்வேறு அமைப்புகளை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர் .

Tags

Next Story