வெள்ளியணையில் ஸ்மாட் மீட்டர் திட்டத்தை எதிர்த்து தெருமுனை கூட்டம்

வெள்ளியணையில் ஸ்மாட் மீட்டர் திட்டத்தை எதிர்த்து தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
வெள்ளியணையில் ஸ்மாட் மீட்டர் திட்டத்தை எதிர்த்து தெருமுனை கூட்டம். கரூர் மாவட்டம், வெள்ளியணை கடைவீதி பகுதியில், மின்வாரியம் மூலம் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை எதிர்த்து, தமிழக விவசாயிகள் சங்கம் சார்பாக தெருமுனை கூட்டம் சங்கத்தின் கரூர் மாவட்ட துணை தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த தெருமுனை கூட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் கந்தசாமி விளக்க உரை நடத்தினார். மேலும், இந்த நிகழ்ச்சியில் சிஐடியு மாவட்ட செயலாளர் முருகேசன், விவசாயிகள் சங்க தாந்தோனி ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணி, கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் ராஜா முகமது உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தம் திட்டத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து விளக்கி பேசினர்.

Tags

Next Story