சாலைகளில் கால்நடைகளை திரியவிட்டால் கடும் நடவடிக்கை

சாலைகளில் கால்நடைகளை திரியவிட்டால் கடும் நடவடிக்கை

சாலையில் திரியும் கால்நடைகள்

வலங்கைமான் பேரூராட்சி பகுதிகளில் சாலைகளில் கால்நடைகளை திரியவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சி பகுதியில் கடைவீதி மற்றும் முக்கிய பொதுஇடங்களில் கால்நடைகள் கட்டுப்பாடு இன்றி இரவு பகலாக எந்த நிறத்திலும் சுற்றி தெரிகின்றன .இதனால் கடைத்தெரு உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இந்நிலையில் சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே பொது இடங்களில் கால்நடைகளை கட்டுப்பாடு இன்றி திரிய விடும் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி செயல் அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்

Tags

Next Story