குட்கா பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை - எச்சரிக்கை

குட்கா பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை -  எச்சரிக்கை

ஆட்சியர் ஜெயசீலன்

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வது மற்றும் இருப்பு வைப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உணவு பாதுகாப்பு துறை அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல் துறையினரும் இணைந்து பெட்டிக்கடைகளில் நடத்திய ஆய்வில் தடை செய்யப்பட்ட புகையிலை வைத்திருத்த கடைகளுக்கு ரூ.8 இலட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதாகவும் மே மாதத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும், காவல் துறையினரும் இணைந்து பெட்டிக் கடைகள் மற்றும் வாகனங்களில் தடை செய்த புகையிலை பொருட்கள் உள்ளதா என சோதனை நடத்தியதில்,33 பெட்டிக்கடைகளில் 90 கிலோ எடையுள்ள ரூ.90,000/- மதிப்பிலான புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டது.

இது தொடர்பாக 33 பெட்டிக்கடைகள் சீல் வைக்கப்பட்டு ரூ.8 இலட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது மேலும் முதன் முறையாக தடை செய்யப்பட்ட புகையிலை விற்பது கண்டுபிடிக்கப்பட்டால் ரூ.25 ஆயிரம் அபராதம், 15 நாட்களுக்கு கடை மூடி சீல் வைக்கப்படும். 2வது முறையாக தவறு செய்தால் ரூ.50 ஆயிரம் அபராதம் ஒரு மாதம் வரை கடை மூடி சீல் வைக்கப்படும். 3வது முறையும் தவறு செய்தால் ரூ.1லட்சம் அபராதம், மூன்று மாதங்களுக்கு கடை மூடி சீல் வைக்கப்படும்.

இம்மாவட்டம் முழுவதும் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வது மற்றும் இருப்பு வைப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story