அரசு கொள்முதல் நிலையங்களில் முறைகேடு செய்தால் கடும் நடவடிக்கை

அரசு கொள்முதல் நிலையங்களில் முறைகேடு செய்தால் கடும் நடவடிக்கை

ஆட்சியர் ஆய்வு 

உங்கள் ஊரில் உங்களை தேடி என்ற திட்டத்தின் கீழ் மங்கைநல்லூர் ஊராட்சியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்த ஆட்சியர் முறைகேடு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் உங்கள் ஊரில் உங்களை தேடி என்ற திட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று 24 மணி நேரம் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் மங்கைநல்லூர் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். அப்போது நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர், விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய நிலைய அதிகாரிகள் பணம் வசூலிக்கின்றனரா? சரியான எடையில் நெல் கொள்முதல் செய்யப்படுகிறதா என்பதை கேட்டறிந்தார். தொடர்ந்து அவர் நெல்லுக்கு பணம் வசூல் செய்யப்படுவது குறித்து விவசாயிகள் புகார் அளித்தால் உடனடியாக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

Tags

Next Story