கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி வேலை நிறுத்தம்

கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி  வேலை நிறுத்தம்

 தொழிற்சங்கத்தினர் மற்றும் விவசாய முன்னணி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நத்தத்தில் வரும் 16ம் தேதி வேலை நிறுத்தம், மறியல் போராட்டம் நடக்கிறது. 

தொழிற்சங்கத்தினர் மற்றும் விவசாய முன்னணி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நத்தத்தில் வரும் 16ம் தேதி வேலை நிறுத்தம், மறியல் போராட்டம் நடக்கிறது.
அனைத்து தொழிற்சங்கம் மற்றும் ஐக்கிய விவசாய முன்னணி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி வரும் 16ஆம் தேதி வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி போராட்டத்தை விளக்கி பிரச்சார இயக்கம் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இந்த பிரச்சார இயக்குனர் போராட்டத்திற்கு கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லதுரை தலைமை வகித்தார். சிஐடி மாவட்ட செயலாளர் அகஸ்டின் முன்னிலை வகித்தார். தமிழக விவசாய சங்க மாநில பொதுச் செயலாளர் ராஜா சிதம்பரம் போராட்டத்தை விளக்கி பேசினார். இதைத்தொடர்ந்து பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் மற்றும் முக்கிய பகுதியில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது.

Tags

Next Story