கண்ணாடி சப்பர வாகனத்தில் அம்மன் வீதி உலா

கண்ணாடி சப்பர வாகனத்தில் அம்மன் வீதி உலா
சிவகாசி பங்குனி பொங்கல் 5 ஆம் திருவிழா.கண்ணாடி சப்பரத்தில் அம்மன் வீதி உலா...
சிவகாசி அருகே திருத்தங்கல் இந்து அறநிலையத் துறைக்கு பாத்தியமான ஸ்ரீமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவின் 5 ஆம் திருவிழா கண்ணாடி சப்பரத்தில் அம்மன் வீதி உலா நடைப்பெற்றது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல் இந்து அறநிலையத் துறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் பங்குனி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.பங்குனி பொங்கலின் 5 ஆம் திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டன.

பின்னர் அம்மனுக்கு மஞ்சள் பட்டு உடுத்தி மேளம்,தாளம் முழங்க வாண வேடிக்கையுடன் சிம்ம வாகனத்தில் அம்மன் வீதி உலா நிகழ்ச்சி அதிவிமர்ச்சியாக நடைப்பெற்றன.பின்னர் பக்தர்கள் தங்களது நேர்த்தி கடன் செலுத்தும் நிகழ்சசியும் நடைப்பெற்றன. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags

Next Story