பலத்த காற்று; மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

பலத்த காற்று; மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் 2000க்கும் மேற்பட்ட விசை, நாட்டுப்படகுகள் மீன்பிடி இன்று கடலுக்கு செல்லாமல் தூத்துக்குடி துறைமுகத்திலேயே நிறுத்திவைக்கப்பட்டன.

பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் 2000க்கும் மேற்பட்ட விசை, நாட்டுப்படகுகள் மீன்பிடி இன்று கடலுக்கு செல்லாமல் தூத்துக்குடி துறைமுகத்திலேயே நிறுத்திவைக்கப்பட்டன.

தூத்துக்குடி: வங்க கடல் மற்றும் மன்னர் வளைகுடா, குமரிக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டுப் படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல மீன்வளத்துறை தடை 300 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 2000 க்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்திவைப்பு வங்க கடல் பகுதி மற்றும் மன்னார் வளைகுடா குமரிக்கடல் பகுதி தென்கிழக்கு அரபிக்கடல் மாலத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் 55 கிலோமீட்டர் முதல் 60 கிலோமீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும் .

மேலும் அவ்வப்போது சுழல் காற்று வீசகூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட மீன்வளத்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டுப் படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் பத்திரமாக இருக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 2000க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

Tags

Next Story