சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழப்பால் போராட்டம்

சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழப்பால் போராட்டம்

சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவரின் உறவினர்கள் வாக்குவாதம் 

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் விபத்தில் படுகாயமடைந்த சிறுவனுக்கு சரியான சிகிச்சை வழங்கவில்லை என உறவினர்கள் போராட்டம்

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் திண்டுக்கல் டூ பழனி ரோடு ரெட்டியார்சத்திரம் அருகே கார் - இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த வாழைக்காய்பட்டி பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவரது மகன் நித்திஷ் என்ற இளைஞர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் .

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். முறையான சிகிச்சை அளிக்காததே சிறுவனின் மரணத்திற்கு காரணம் எனக்கூறி உறவினர்கள் மருத்துவமனையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags

Next Story