மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

பொன்மனை அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பேரணியை பேரூராட்சி தலைவர் அகஸ்டின் தொடங்கி வைத்தார்.

பொன்மனை அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பேரணியை பேரூராட்சி தலைவர் அகஸ்டின் தொடங்கி வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் பொன்மனை பேரூராட்சிக்குட்பட்ட பொன்மனை சந்திப்பில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. வரும் கல்வியாண்டில் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும், அரசு சார்பில் வழங்கப்படும் சலுகைகள் உயர்படிப்பில் அரசு மூலம் வழங்கும் நிதியுதவி ஆகியவற்றை விளக்கி அரசு பள்ளியில் இருந்து அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் விதமாக பேரணி நடைபெற்றது.இந்த பேரணியை பேரூராட்சி தலைவர் அகஸ்டின் தொடங்கி வைத்தார். வார்டு உறுப்பினர் சாந்தி, பள்ளி தலைமையாசிரியர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியில் பள்ளி மாணவ-மாணவிகள் கையில் பதாகைகளுடன் பேரணியாக சென்றனர்.

Tags

Next Story