மாணவி தற்கொலை முயற்சி

மாணவி தற்கொலை முயற்சி

மாணவி தற்கொலை முயற்சி

 

அய்யலூர் அருகே மொட்டணம்பட்டியை சேர்ந்த பிளஸ் 1 மாணவியை காதல் விவகாரம் காரணமாக, பெற்றோர் கண்டித்ததால் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகில் உள்ள கே.புதுக்கோட்டை மொட்டணம்பட்டியை சேர்ந்தவர் ராஜா. கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் நடுப்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். அதேபள்ளியில் படித்த சக்திவேல் (19) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. வாரவிடுமுறை நாட்களில் இவர்கள் இருவரும் வெளியே செல்வது வழக்கம். அவ்வாறு செல்லும்போது அவர்களது புகைப்படங்களை சக்திவேல் தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்து வந்துள்ளார்.இதைபார்த்த ராஜா மற்றும் அவரது குடும்பத்தினர் தனது மகளை கண்டித்துள்ளனர். மேலும் இனிமேல் சக்திவேலுடன் பழகக்கூடாது என்றும் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த மாணவி பிரேக் ஆயிலை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

Tags

Next Story