தேர்வில் தோல்வி: மாணவி தற்கொலை

தேர்வில் தோல்வி: மாணவி தற்கொலை

தற்கொலை 

தென்காசி மாவட்டம், குருவிகுளம் அருகே தேர்வில் தோல்வி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள குருவிகுளம் ஒன்றியம் நாயக்கர் பட்டி கிராமத்தில் சண்முகராஜ் என்பவரின் மகள் பூமிகா தேவி இவர் 11 ஆம் வகுப்பு தேர்வு வெளியானதில் அவர் தேர்ச்சி பெறவில்லை. இதனால் மனம் உடைந்த அவர் வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதை கண்ட பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story