கடையநல்லூா் அருகே சாலையில் மயங்கி விழுந்து மாணவா் பலி

கடையநல்லூா் அருகே சாலையில் மயங்கி விழுந்து மாணவா் பலி
மாணவா் பலி
கடையநல்லூா் அருகே சாலையில் மயங்கி விழுந்து மாணவா் பலி. போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூா் மதினாநகரை சோ்ந்த நயினாமுகம்மது மகன் முஹம்மதுமைதீன்(16). அரசு உதவி பெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தாா். நோன்பு வைத்திருந்த முகமதுமைதீன், பள்ளிவாசலில் நோன்பு திறப்பு நிகழ்வில் பங்கேற்றுவிட்டு, காயிதேமில்லத் திடல் வழியாக வீட்டிற்கு நடந்து வரும்போது, எதிா்பாராமல் கீழே விழுந்து மயங்கி விட்டாராம். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். ஆனால், அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். கடையநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Tags

Next Story