குளத்தில் மூழ்கி மாணவன் பலி

குளத்தில் மூழ்கி மாணவன் பலி

பலியான சிறுவன் 

திருவண்ணாமலையில் குளத்தில் மூழ்கி மாணவன் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் மயில்ராஜ், அவரது மகன் தருண்குமார் (வயது 12), 6-ம் வகுப்பு படித்து வந்தான். இவன் ஈசானிய குளத்தில் நண்பர்களுடன் குளிக்க சென்ற போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தான். இதுகுறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story