கிணற்றில் தவறி விழுந்த மாணவன் பலி

கிணற்றில் தவறி விழுந்த மாணவன் பலி

பலியான மாணவன் 

பரமத்தி வேலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த மாணவன் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பரமத்தி வேலூர் அடுத்துள்ள பொத்தனூரைச் சேர்ந்தவர் உலகநாதன் கீதா தம்பதி இவர்களது மகன் சௌந்தர் (17) நடந்து முடிந்த பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 469 மதிப்பெண்கள் பெற்று கல்லூரியில் சேர்வதற்கான முயற்சிகளை செய்து வந்துள்ளார். இந்நி லையில் நேற்று சௌந்தர் தனது நண்பர்களுடன் பொத்தனூர் அருகே தேவராயசமுத்திரம் பகுதியில் உள்ள விவசாய கிணற்றுக்கு சென்றான்.

குளிக்க சென்ற மாணவன் நீச்சல் தெரியாததால் கிணற்றுக்கு அருகே நின்று கொண்டிருந்த போது, சௌந்தர் திடீரென நிலை தடுமாறி கிணற்றில் தவறி விழுந்துள்ளான். இதைப்பார்த்த அவரது நண்பர்கள் உடனடியாக காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.

இதையடுத்து கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீய ணைப்பு வீரர்கள் கிணற்றிலிருந்து சௌந்தர் உடலை சடலமாக மீட்டனர். பின்னர் வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story