சேலத்தில் நடந்த ஆணழகன் போட்டியில் மாணவர் தங்க பதக்கம்

சேலத்தில் நடந்த ஆணழகன் போட்டியில் மாணவர் தங்க பதக்கம்

ஆணழகன் போட்டியில் தங்க பதக்கம் வென்றார் 

சேலத்தில் நடந்த ஆணழகன் போட்டியில் மாணவர் தங்க பதக்கம் வென்றார்

சேலம் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி சேலத்தில் நடந்தது. இதில் ஏ.வி.எஸ். பொறியியல் கல்லூரியில் எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவர் கே.கோகுல் கலந்து கொண்டு 75 கிலோ எடை பிரிவுக்கான ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் பெற்றார்.

மேலும் சாம்பியன் ஆப் சாம்பியன்ஸ் என்ற விளையாட்டு போட்டியில் பதக்கம், ரொக்கபரிசு பெற்றார். அதன்படி ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர் கே.கோகுலை, கல்லூரி தாளாளர் கே.செந்தில்குமார், முதல்வர் ஜே.சுந்தர்ராஜன் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த விழாவில் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் வடிவேல், பயிற்சியாளர் வதணன், தலைமை பயிற்சியாளர் பொன் சடையன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story