விபத்தில் மாணவி உயிரிழப்பு

விபத்தில் மாணவி உயிரிழப்பு
 ராஜபாளையம் அருகே பள்ளி வாகனம் மோதி மாணவி உயிரிழந்தார்.

ராஜபாளையம் அருகே பள்ளி வாகனம் மோதி மாணவி உயிரிழந்தார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சோலை சேரி பகுதியில் தனியார் பள்ளி வாகனத்தில் இருந்து இறங்கிய போது, வாகனத்தின் பின் சக்கரம் ஏறி மாணவி ஷிவானி(5) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ராஜபாளையம் அருகே சோலைசேரி பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் ஷிவானி(5) ராஜபாளையத்தில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்து வந்தார்.

மாணவி ஷிவானி பள்ளி வாகனத்தில் சென்று வருவது வழக்கம். நேற்று பள்ளிக்கு சென்று விட்டு பள்ளி வாகனத்தில் வீடு திரும்பினார். கிருஷ்ணா புரத்தைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன்(31) என்பவர் வாகனத்தை ஒட்டி வந்தார். நேற்று மாலை 5 மணி அளவில் சோலைசேரி மந்தை தெருவில் மாணவி ஷிவானி வாகனத்தில் இருந்து இறங்கினார். அப்போது ஓட்டுநர் வாகனத்தை இயக்கியதால், மாணவி ஷிவானி மீது வாகனத்தின் பின் சக்கரம் ஏறியது. அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர் மாணவி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து சேர்த்து ஊரக போலீஸார் வழக்கு பதிவு செய்து, வாகன ஓட்டுநர் ஜெகதீஸ்வரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story