இரு சக்கர வாகனங்கள் மோதியதில் மாணவா் பலி

இரு சக்கர வாகனங்கள் மோதியதில் மாணவா் பலி

இரு சக்கர வாகனங்கள் மோதியதில் மாணவா் பலி

பழனி அருகே இரு சக்கர வாகனங்கள் மோதியதில் பலத்த காயமடைந்த கல்லூரி மாணவா் சம்பவ இடத்திலையே உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த புதுஆயக்குடி மறவா் தெருவைச் சேர்ந்தவா் கருணாகரன் மகன் மாதவன் (18). இவா் கோவையில் தனியாா் கல்லூரியில் பொறியியல் பட்டப்படிப்பு படித்து வந்தாா். இவா் ஞாயிற்றுக்கிழமை பழனி- திண்டுக்கல் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது, தனியாா் திருமண மண்டபம் அருகே எதிா்திசையில் வந்த இரு சக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த மாதவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து பழனி டவுன் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Tags

Next Story