குட்ஷெப்பர்ட் பள்ளியில் மாணவத் தலைவர்கள் பதவி ஏற்பு விழா!

குட்ஷெப்பர்ட் பள்ளியில் மாணவத் தலைவர்கள் பதவி ஏற்பு விழா!

பதவி ஏற்பு விழா

தூத்துக்குடி குட்ஷெப்பர்ட் மாடல் சிபிஎஸ்இ பள்ளியில் பள்ளி மாணவத் தலைவர்கள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.
தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியில் அமைந்துள்ள ஸ்காட் கல்விக் குழுமத்தின் ஓர் அங்கமான குட்ஷெப்பர்ட் மாடல் சிபிஎஸ்இ பள்ளியில் மாணவத் தலைவர் வகுப்புத் தலைவர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் முதல்வர் ராபர்ட் பென் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு காவல்துறை ஆய்வாளர் ஜோஸ்லின் அருள் செல்வி கலந்துகொண்டு மாணவத் தலைவர் துணைத் தலைவர் மற்றும் வகுப்பு தலைவர்களுக்கு பேட்ஜ் அணிவித்து பதவிப்பிரமாணம் செய்து வைத்து சிறப்புரையாற்றினார். விழாவில் அவர் பேசுகையில் "தற்போதைய காலகட்டத்தில் செல்போன் செயலிகளால் நடத்தப்படும் குற்றங்கள் பற்றியும் பள்ளி மாணவர்கள் செல்போன் பயன்பாட்டை தவிர்க்க வேண்டியதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தார்கள் அதனைத் தொடர்ந்து மாணவத் தலைவர்கள் பள்ளி உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து தேசிய கீதம் பாடப்பட்டு விழா நிறைவு பெற்றது விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வரின் வழிகாட்டுதலின்படி பள்ளியின் ஆசிரியர் ஆசிரியைகள் செய்திருந்தனர்

Tags

Next Story