மாணவி மாயம்- பெற்றோர் போலீசில் புகார்

மாணவி மாயம்- பெற்றோர் போலீசில் புகார்

பைல் படம் 

கோவை சாய்பாபா காலனியில் வாலிபர் கடத்தி சென்ற பள்ளி மாணவியை கண்டுபிடித்து தரக்கோரி பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவியை தேடி வருகின்றனர்.
கோவை:சாய்பாபா காலனி சேர்ந்த 15 வயது சிறுமி அப்பகுதி உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவிக்கு சொக்கம்புதூரை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது.இந்த விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவர மாணவியை கண்டித்ததுடன் அவரை பாட்டி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.இந்நிலையில் மாணவியை தொடர்பு கொண்ட வாலிபர் திருமணம் செய்து கொள்வதாக கூறி மாணவியை கடத்திச் சென்றுள்ளார்.இதுகுறித்து தகவல் அறிந்த பெற்றோர்கள் மாணவியை பல்வேறு இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாத நிலையில் ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து மாணவியை கடத்திச் சென்ற வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவியை தேடி வருகின்றனர்.

Tags

Next Story