கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை

கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை
தூக்கிட்டு தற்கொலை செய்த மிதுன் குமார்
கன்னியாகுமரி மாவட்டம், குமாரபுரத்தில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி குமாரபுரம் பகுதியில் இன்ஜினியரிங் காலேஜ் உள்ளது. இந்த காலேஜில் பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இதில் தென்காசி மாவட்டம் சேர்ந்த மணிகண்டன் மகன் கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கல்லூரி விடுதியில் தங்கியிருந்தார். நேற்று இரவு நண்பர்களுடன் பேசிவிட்டு மிதுன்குமார் தனது அறைக்கு சென்றார்.

இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் அவரது அறை திறக்கப்படவில்லை. நண்பர்கள் சென்று பார்த்தபோது மாறுன்குமார் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டனர். இது குறித்து கல்லூரி நிர்வாகத்திற்கும், பெற்றோருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் மிதுன்குமாரின் தந்தை மணிகண்டன் கல்லூரிக்கு சென்று சம்பவம் குறித்து ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்தார்.

போலீசார் மிதுன் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் மிதுன் குமார் சொந்த ஊரில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்ததும், அந்தப் பெண் கடந்த இரண்டு நாட்களாக அவரிடம் பேசாததால் மன வேதனை அடைந்த தற்கொலை செய்ததாகவும் தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story