திருவெண்ணைநல்லூர் அருகே மரம் விழுந்ததில் மாணவன் காயம்

திருவெண்ணைநல்லூர் அருகே மரம் விழுந்ததில் மாணவன் காயம்

பைல் படம்

திருவெண்ணைநல்லூர் அருகே திடீரென வீசிய காற்றில் மரம் மேலே விழுந்ததில் மாணவன் காயம் அடைந்தார்.

திருவெண்ணெய்நல்லூா் வட்டம், அண்ராயநல்லூா் தெற்குத் தெருவைச் சோ்ந்த வீரமணியின் மகன் விஷ்ணு(16). திருவெண்ணெய்நல்லூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 பயின்று வருகிறாா்.இவா் கடந்த 10- ஆம் தேதி பள்ளி முடிந்து திருவெண்ணெய்நல்லூா் வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.

அப்போது வீசிய காற்றில் சாலையோர மரம் விழுந்ததில், மரக்கிளைகளுக்கிடையே விஷ்ணு சிக்கி காயமடைந்தாா்.அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளாா்.இது குறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Tags

Next Story