மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டியில் மாணவ- மாணவிகள் உற்சாகம்.

கரூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டியில் மாணவ மாணவிகள் உற்சாகம்.
கரூரில், நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டியில் மாணவ- மாணவிகள் உற்சாகம். கரூர் அடுத்த காந்திகிராமம் பகுதியில் உள்ள லாட்ஸ்பாராக் பள்ளி வளாகத்தில், தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் நடத்திய மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டிகளை கரூர் மாவட்ட சிலம்பாட்டக் கழக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் கரூர் மாவட்டம் கழக தலைவர், முன்னாள் எம்எல்ஏ மலைப்பசாமி, லாட்ஸ்பாட் மெட்ரிகுலேஷன் பள்ளி முதல்வர் பாலகிருஷ்ணன், கரூர் மாவட்ட விளையாட்டு வளர்ச்சிக் கழக தலைவர் வீர திருப்பதி உள்ளிட்டு கலந்து கொண்டு சிலம்பாட்ட போட்டி நிகழ்வை சிறப்பித்தனர். இந்த போட்டியில் கரூர் மாவட்ட அளவிலான 10,14,17,19, வயது முதல் 25 வயது வரையிலான பள்ளி மாணவ-மாணவியர், பொதுப் பிரிவினர் கலந்து கொண்டு தங்களது திறன்களை வெளிப்படுத்தினர். இந்நிகழ்வில் ஒற்றைக் கொம்பு, இரட்டைக் கொம்பு, கம்பால் தொடும் முறை என மூன்று விதமான போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கோப்பைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி

Tags

Next Story