பள்ளி கலைத்திருவிழாவில் மாணவர்கள் உற்சாகம்

பள்ளி கலைத்திருவிழாவில் மாணவர்கள் உற்சாகம்

கலை திருவிழா 

குன்றத்தூரில் நடந்த மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டியில் பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாவட்ட அளவிலான போட்டிகள், 'கலை திருவிழா' எனும் பெயரில், குன்றத்துார் சேக்கிழார் அரசு மேல்நிலை பள்ளியில் நேற்று துவங்கின. வரும் 28ம் தேதி வரை தொடர்ந்து நடக்கின்றன. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் அன்பரசன் மற்றும் காஞ்சிபுரம் கலெக்டர் கலைசெல்வி துவங்கி வைத்தனர். ஆறு முதல் எட்டாம்வகுப்பைச் சேர்ந்த, பலஅரசு பள்ளிகளில் இருந்து மொத்தம் 2,712 மாணவ - மாணவியர் பங்கேற்றுள்ளனர். இவர்கள் கும்மி, தனி, கிராமியம், செவ்வியல் நடனம் போன்றவற்றில் தங்கள் திறமையை வெளிப்படுத்தி, பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினர். நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வெற்றிச்செல்வி, குன்றத்துார் நகராட்சி தலைவர் சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இப்போட்டியில் பங்கேற்றுள்ளோர், இதற்கு முன் நடந்த பள்ளி, வட்டார அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags

Next Story