புகையில்லா போகி குறித்த விழிப்புணர்வு பேரணி

புகையில்லா போகி குறித்த விழிப்புணர்வு பேரணி

வளவனூரில் புகையில்லா போகி குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

வளவனூரில் புகையில்லா போகி குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் பேரூராட்சி சார்பில், புகையில்லா போகி பண்டிகையை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதற்கு வளவனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜ் தலைமை தாங்கினார்.

பேரணியை பேரூராட்சி மன்ற தலைவர் மீனாட்சி ஜீவா தொடங்கி வைத்தார். பேரணியானது பள்ளி வளா கத்தில் இருந்து புறப்பட்டு வளவனூரில் முக்கிய வீதிகள் வழியாக சென்று, மீண்டும் பள்ளியை வந்தடைந்தது, இதில் பங்கேற்ற மாணவர்கள், பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட் களை தீ வைத்து எரிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களி டையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர், மாணவர்கள், ஆசிரியர்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story