அரசு விடுதிகளில் தங்கி படிக்க மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

அரசு விடுதிகளில் தங்கி படிக்க மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

மாவட்ட ஆட்சியர் 

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு விடுதிகளில் தங்கி படிக்க மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசால் விழுப்புரம் மாவட்டத்தில் பிற் படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சீர்மர பினர் மாணவ, மாணவிகளுக்கென மொத்தம் 35 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பள்ளி மாணவர்களுக்கென 24 விடுதிகளும், மாணவிகளுக்கென 5 விடுதிகளும்,

கல்லூரி மாணவர்களுக்கென 3 விடுதிகளும், மாணவிக ளுக்கென 3 விடுதிகளும் உள்ளன.பள்ளி விடுதியில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்ப டிப்பு, ஐ.டி.ஐ. மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் படிக்கும் மாணவ-மாணவிகளும் சேர தகுதியுடை யவர்கள் ஆவர்.

விடுதிகளில் எவ்வித செலவின மும் இல்லாமல் பின்வரும் சலுகைகள் வழங்கப் படுகின்றன. அனைத்து விடுதி மாணவ- மாணவிகளுக்கும் 3 வேளை உணவு மற்றும் தங்கும் வசதியும் அளிக் கப்படும். 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு 4 இணை சீருடைகள் தைத்து வழங்கப்படும். 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளின் கல்வித்திறனை மேம்ப டுத்தும்பொருட்டு சிறப்பு வழிகாட்டிகள் மற்றும் வினா வங்கி நூல்கள் வழங்கப்படும்.

கல்லூரி விடுதிகளில் முதலாம் ஆண்டு தங்கிப்படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஜமக்காளமும், பள்ளி விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவ - மாணவிக ளுக்கு ஆண்டுதோறும் பாய்களும் வழங்கப்படும். மலைப்பிரதேசங்களில் இயங்கும் விடுதிகளில் கம்பளி மேலாடைகள் வழங்கப்படும்.

இவ்விடுதிகளில் சேருவதற்கான தகுதிகள் பெற் றோர் மற்றும் பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து படிக்கும் கல்வி நிலையத் தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீ.க்கு மேல் இருக்க வேண்டும்.

இந்த தூர விதி மாணவிக ளுக்கு பொருந்தாது. தகுதியுடைய மாணவ- மாணவிகள், விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை யினர் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண் ணப்பங்கள், பள்ளி விடுதிகளை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினியி டம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற் றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வரு கிற 14-ந்தேதிக்குள்ளும், கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவல கத்தில் 15.7.2024-க்குள்ளும் சமர்ப்பிக்க வேண் டும். மாணவ- மாணவிகள், விண்ணப்பிக்கும் போது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமா னம் குறித்த சான்றிதழ்கள் ஏதும் அளிக்கதேவையில்லை. விடுதியில் சேரும்போது மட்டும் சான்றிதழ்களை அளித்தால் போதுமானது.

தமிழ் நாட்டில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக் கென தனியாக 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள் ளன. எனவே பள்ளி-கல்லூரி மாணவ-மாணவி கள் அரசின் இச்சலுகைகளை பெற்று பயனடையு மாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story