ஆணழகன் போட்டி: ஏ.வி.எஸ்., பொறியியல் கல்லூரி மாணவர்கள் முதலிடம்

ஆணழகன் போட்டி:  ஏ.வி.எஸ்., பொறியியல் கல்லூரி மாணவர்கள் முதலிடம்

 மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் சேலம், ஏ.வி.எஸ்., பொறியியல் கல்லூரி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர். 

மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் சேலம், ஏ.வி.எஸ்., பொறியியல் கல்லூரி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர்.
தமிழ்நாட்டில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றுள்ள 503 பொறியியல் கல்லூரிகளுக்கு இடையிலான மாநில அளவில் ஆணழகன் போட்டி நடந்தது. இதில், சேலம் ஏ.வி.எஸ். பொறியியல் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு 2 தங்கம் மற்றும் 2 வெள்ளி பதக்கம் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று முதல் இடத்தை பிடித்தனர். இதனால் கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை கல்லூரி தாளாளர் செந்தில்குமார், முதல்வர் சுந்தரராஜன் மற்றும் துணை முதல்வர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

Tags

Next Story