விஜயகாந்த் படித்த பள்ளியில் அஞ்சலி செலுத்திய மாணவர்கள்

விஜயகாந்த் படித்த பள்ளியில் அஞ்சலி செலுத்திய மாணவர்கள்

  விஜயகாந்த் மறைவை முன்னிட்டு மதுரையில் அவர் படித்த பள்ளியில் மாணவர்களும், ஆசிரியர்களும் அஞ்சலி செலுத்தினர்.

விஜயகாந்த் மறைவை முன்னிட்டு மதுரையில் அவர் படித்த பள்ளியில் மாணவர்களும், ஆசிரியர்களும் அஞ்சலி செலுத்தினர்.
மதுரையில் விஜயகாந்த் நடித்த பள்ளியில் ஆசிரியர்கள் மாணவர்கள் அஞ்சலி மறைந்த தேமுதிக தலைவர் மற்றும் நடிகருமான விஜயகாந்த் மறைவிற்கு மதுரையில் அவர் படித்த எம் .சி. (MC) மதுரா கல்லூரி மேல்நிலைப் பள்ளியில்,ஆசிரியர்கள் மாணவர்கள் மறைந்த விஜயகாந்தின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும் தங்களது பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்த விஜயகாந்த் படிப்பிலும் விளையாட்டிலும் சிறந்து விளங்கியதாக பள்ளி தலைமை ஆசிரியர் தெரிவித்தார். மேலும் அவருக்கு கபடி விளையாட்டில் மிகுந்த ஆர்வம் இருந்ததால் பள்ளிக்காக கபடி விளையாடி வெற்றிபெற்றதாகவும்,சஆசிரியர்கள் தெரிவித்தார்கள். மேலும் தங்களது பள்ளியில் படித்ததால் நல்ல இறக்க குணம் மற்றும் ஆளுமை தன்மை பெற்றிருக்கலாம் என்று ஆசிரியர்கள் பெருமிதம் தெரிவித்தனர். விஜயகாந்த் அவர்கள் படித்த போது பள்ளி பதிவேட்டில் அவருடைய பெயர் மற்றும் மதிப்பெண் பதிவேட்டினை ஆசிரியர்கள் பார்வையிட்டனர்

Tags

Next Story