திருத்தணி அருகே பேருந்து வசதி கேட்டு மாணவர்கள் மறியல்

திருத்தணி அருகே பேருந்து வசதி கேட்டு மாணவர்கள் மறியல்

மறியலில் ஈடுபட்ட மாணவர்கள்

திருத்தணி அருகே பேருந்து வசதி கேட்டு மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

பள்ளிப்பட்டு ஒன்றியம், பொதட்டூர்பேட்டையில் இருந்து திருத்தணி செல்லும் சாலையில் அமைந்துள்ளது நெடுங்கல் கிராமம். இந்த பகுதியை சேர்ந்த மாணவ, மாணவியர், பொதட்டூர்பேட்டை மற்றும் திருத்தணியில் உள்ள பள்ளி, கல்லுாரிகளில் படித்து வருகின்றனர்.

பொதட்டூர்பேட்டையில் இருந்து திருத்தணிக்கு போதிய பேருந்து வசதி இல்லை என்பதை கண்டித்து, நெடுங்கல் பகுதியில், நேற்று காலை 9:00 மணியளவில், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொதட்டூர்பேட்டை போலீசார், மாணவர்களை சமரசம் செய்தனர். அதை ஏற்று, மாணவர்கள் கலைந்து சென்றனர். மறியல் காரணமாக, 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags

Next Story