பேருந்துகளில் கூட்ட நெரிசல்- கூடுதல் பேருந்து இயக்க மாணவிகள் கோரிக்கை

பேருந்துகளில் கூட்ட நெரிசல்- கூடுதல் பேருந்து இயக்க மாணவிகள் கோரிக்கை

பேருந்து படிக்கட்டுகளில் பயணம் 

வாலாஜாவில் கூடுதல் பேருந்து சேவையை இயக்க வேண்டும் என அரசு கல்லூரி மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் மாவட்டம் முழுவதிலும் இருந்து நாள்தோறும் கல்வி கற்பதற்காக பேருந்துகள் மூலமாக வந்து செல்கின்றனர். இந்த நிலையில் பல்வேறு கிராமப்புற பகுதிகளுக்கு குறிப்பிட்ட நேர பேருந்துகளே இயக்கப்படுவதால் மாணவிகள் வரக்கூடிய ஒரு சில பேருந்துகளில் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு பேருந்துகளில் கூட்ட நெரிசல்களில் சிக்கி கொண்டும் பேருந்தின் படிக்கட்டுகளில் நின்றபடியும் நாள்தோறும் ஆபத்தான முறையில் பயணம் செய்து வருகின்றனர்..எனவே மாணவிகளின் சிரமத்தை போக்கும் விதமாக கல்லூரி நடைபெறும் நாட்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பேருந்து சேவைகளை இயக்க வேண்டும் என்பது மாணவிகள் மற்றும் பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags

Next Story