செஞ்சி அருகே பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸிடம் செல்பி எடுத்துக் கொண்ட மாணவ மாணவிகள்

செஞ்சி அருகே பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸிடம் செல்பி எடுத்துக் கொண்ட  மாணவ மாணவிகள்

அன்புமணி ராமதாஸ்

செஞ்சி அருகே பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் மாணவ மாணவிகளிடம் செல்பி எடுத்துக் கொண்ட சம்பவம் காண்போரை நெகிழ்ச்சி அடைய செய்தது.
விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியம் கீழ்மாம்பட்டு ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் மாநிலங்களவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 28 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கொண்ட கட்டிடம் கட்டுவதற்கு அதற்கான பணிகள் மேற்கொண்டு அதன் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது, இந்த நிகழ்ச்சிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் ரூபாய் 28 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார், அப்பொழுது அங்கிருந்த அரசு பள்ளி மாணவர்களிடம் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். பின்னர் மாணவ மாணவிகள் மாநிலங்களை உறுப்பினர் அன்புமணி ராமதாஸிடம் செல்பி எடுத்துக் கொண்டனர். பின்னர் மாணவிகளிடம் செல்போனை வாங்கிய அன்புமணி ராமதாஸ் செல்பி எடுத்துக் கொண்ட சம்பவம் அங்கிருந்த மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story