திண்டுக்கல்லில் ஆபத்து உணராமல் அபாயத்தில் பயணிக்கும் மாணவர்கள்

திண்டுக்கல்லில் ஆபத்து உணராமல் அபாயத்தில் பயணிக்கும் மாணவர்கள்

பின்புறத்தில் பயணிக்கும் மாணவர்கள்

திண்டுக்கல்லில் ஆபத்து உணராமல் மாணவர்கள் பேருந்தின் பின்புறம் உள்ள படியில் பயணம் செய்து வருகின்றனர்.

திண்டுக்கல்லில் பஸ்களில் தொங்கியபடி பள்ளி, கல்லூரி மாணவர்கள் செல்லும் அபாய பயணம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. எத்தனை முறை சொன்னாலும் கேட்காத மாணவர்களுக்கு பெற்றோரும், பள்ளி நிர்வாகமும் அறிவுரை கூறி அனுப்ப வேண்டும் என்று டிரைவர்கள், கண்டக்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக மாணவர்கள் சிலர் பஸ்சில் பயணம் செய்யும்போது படிக்கட்டில் தொங்கியபடியும், பஸ்சின் பக்கவாட்டில் உள்ள கம்பியில் தொங்கிக்கொண்டும் சாகச பயணம் செய்கின்றனர்.

திண்டுக்கல் போக்குவரத்து துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story