ஆபத்தான முறையில் பயணம் செய்யும் மாணவர்கள்

ஆபத்தான முறையில் பயணம் செய்யும் மாணவர்கள்

நெற்குப்பை அருகே ஆபத்தான முறையில் மாணவர்கள் பயணம் செய்வது குறித்த வீடியோ வைரலாகி உள்ளது. 

நெற்குப்பை அருகே ஆபத்தான முறையில் மாணவர்கள் பயணம் செய்வது குறித்த வீடியோ வைரலாகி உள்ளது.
சிவகங்கை மாவட்டம், நெற்குப்பை அருகே பரியாமருதிப்பட்டியை சேர்ந்த மாணவர்கள் நெற்குப்பை, தெக்கூர் அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர். இந்நிலையில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்ல தனியார் பேருந்தில் மாணவர்கள் பயணம் செய்தனர். அப்போது இடம் கிடைக்காமல் படிக்கட்டில் நின்றும், பின்புற ஏணியில் அமர்ந்தும் மாணவர்கள் பயணம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது

Tags

Next Story