ஓவியப் போட்டியில் சாதனை படைத்த மாணவ, மாணவியர்

குமாரபாளையத்தில் நடந்த ஓவியப் போட்டியில் மாணவ, மாணவியர் சாதனை படைத்தனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சன்ரைஸ் அகாடமி, லிட்டில் ஹான்ட்ஸ் பொதுநல அமைப்பின் சார்பில் ஓவியம், கைவினை பொருட்கள் பயிற்சி, யோகா, உடல்நலம் காக்கும் விழிப்புணர்வு பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. மூன்று வயது முதல் பல்வேறு வயது பிரிவின் கீழ் ஓவியப்போட்டிகள் அமைப்பாளர் பூங்கொடி தலைமையில் நடந்தது. கராத்தே பயிற்சியாளர் பாஸ்கரின் ஷேடோகாய் கராத்தே டூ இன்டர்நேஷனல் ரகுவா சிட்டோரியா அமைப்பின் சார்பில், பயிற்சி மாணவர்கள் கராத்தே சாதனைகள் செய்து காட்டினர். 350 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் போட்டியில் பங்கேற்றனர். சிறந்த ஓவியங்களுக்கு முதல், இரண்டாம், மூன்றாம், நான்காம் பரிசுகள் என ஒவ்வொரு வயது பிரிவின் கீழ் பரிசுகள் வழங்கப்பட்டன.

Tags

Next Story