பெற்றோர்களிடம் ஆசி பெற்று தேர்வு எழுத சென்ற மாணவிகள்

+2 பொது தேர்வு இன்று தொடங்க உள்ள நிலையில் திருச்சியில் தேர்வுக்கு செல்வதற்கு முன்பாக பெற்றோர்களிடம் ஆசி வாங்கியும், கோவிலில் வழிபாடும் செய்தும் மாணவ மாணவிகள் தேர்வுக்கு சென்றனர்.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது. திருச்சி மாவட்டத்தில் உள்ள இரண்டு கல்வி மாவட்டங்களை சேர்ந்த மாணவ மாணவிகள், 30 ஆயிரத்து மூன்று பேர் பிளஸ் 2 தேர்வை எழுதுகின்றனர். இன்று தொடங்கும் பிளஸ் டூ தேர்வு வருகிற 22ஆம் தேதி வரை நடக்கிறது இந்த தேர்வையொட்டி திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு இன்று தொடங்க உள்ள நிலையில் திருச்சியில் தேர்வுக்கு செல்வதற்கு முன்பாக பெற்றோர்களிடம் ஆசி வாங்கியும், கோவிலில் வழிபாடும் செய்தும் மாணவ மாணவிகள் தேர்வுக்கு சென்றனர்

Tags

Next Story