சீரான குடிநீர் வழங்குவது குறித்த ஆய்வு கூட்டம்!

சீரான குடிநீர் வழங்குவது குறித்த ஆய்வு கூட்டம்!

 ஆய்வு கூட்டம்

வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் அரசு முதன்மைச் செயலாளர் தலைமையில் சீரான குடிநீர் வழங்குவது குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களின் ஊரக பகுதிகளில் கோடை காலங்களில் சீரான குடிநீர் வழங்குவது குறித்த ஆய்வு கூட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அரசு முதன்மைச் செயலாளர் முனைவர் செந்தில்குமார் ஐஏஎஸ் தலைமையிலும், வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி ஐஏஎஸ் முன்னிலையிலும் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு முதன்மைச் செயலாளர் பேசுகையில்,"ஊரகப் பகுதிகளில் குடிநீர் குழாய் பழுது மற்றும் உடைப்பு ஆகியவற்றை கண்டறிந்து விரைந்து சீரமைக்க வேண்டும்.

கோடை காலங்களில் அதிகப்படியான மின் நுகர்வின் காரணமாக மின்னழுத்த வேறுபாடு ஏற்படும் பகுதிகளில் பிரச்சனைகளை உடனுக்குடன் ஊரக வளர்ச்சி துறை அலுவலருடன் ஒருங்கிணைந்து மின்துறை அதிகாரிகள் செயல்பட வேண்டும் என கூறினார்.

இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் இயக்குனர் சுமதி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர்கள் ஆர்த்தி, லோகநாயகி, உமா மகேஸ்வரி உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story