சாலை பாதுகாப்பு குறித்து ஆய்வு கூட்டம்

சாலை பாதுகாப்பு குறித்து ஆய்வு கூட்டம்

ஆய்வுக்கூட்டம் 

கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமையில் சட்டம் ஒழுங்கு, சாலை பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் தலைமையில் சட்டம் ஒழுங்கு, சாலை பாதுகாப்பு குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம், மாவட்ட வருவாய் அலுவலர் ம. இராஜசேகரன், சிதம்பரம் சார் ஆட்சியர் ரஷ்மி ராணி, உதவி காவல் கண்காணிப்பாளர் (பயிற்சி) இரவீந்திரகுமார் குப்தா ஆகியோர் உள்ளனர்.

Tags

Next Story