தமிழிசை மூவர் மணிமண்டபத்தை சீரமைக்கும் பணி ஆய்வு

தமிழிசை மூவர் மணிமண்டபத்தை சீரமைக்கும் பணி ஆய்வு

அமைச்சர் ஆய்வு 

சீர்காழியில் உள்ள தமிழிசை மூவர் மணிமண்டபம் சீரமைக்கும் பணியை செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகில் தமிழில் கீர்த்தனைகள் இயற்றி பாடிய மாரிமுத்தா பிள்ளை, முத்து தாண்டவர், அருணாசல கவிராயர் ஆகிய மூவர்களின் நினைவை போற்றும் வகையில் கடந்த திமுக ஆட்சியில் வெண்கலசிலையுடன் கூடிய மணி மண்டபம் அமைக்கப்பட்டது. இந்த மண்டபம் தற்போது ரூ 47 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.இந்தப் பணியினை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முன்னதாக அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறுகையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் கடந்த 2010 ஆம் ஆண்டு தமிழ் வளர்ச்சிக்காக பாடுபட்ட தமிழிசை மூவர்களின் நினைவாக மணிமண்டபம் அமைக்கப்பட்டது. அதற்கு பின்பு வந்த ஆட்சியாளர்கள் இந்த மணிமண்டபத்தை சீரமைக்காததால் சிதிலமடைந்த நிலையில் காணப்பட்டது. இந்நிலையில் தற்போதைய ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் ரூ 47 லட்சம் மதிப்பீட்டில் 95 சதவீத பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளது. இந்த மணிமண்டபம் வரும் காலங்களில் சீர்காழி பகுதியில் போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இதை போல் ஆண்டுதோறும் தமிழிசை மூவர்களின் நினைவை போற்றும் வகையில் தமிழிசை மூவர் விழா முறைப்படி நடக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம், சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், பலர் கலந்து கொண்டனர். சீர்காழியில் தமிழிசை மூவர் மணிமண்டபம் ரூ. 47 லட்சத்தில் புனரமைக்கும் பணி நடைபெற்று வருவதை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமினாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பத்திரிக்கையாளர்கள் தாக்கப்படும்போது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அண்மையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் செய்தியாளர் தாக்கப்பட்ட போது, தமிழக முதல்வர் ஸ்டாலின் காவல்துறைக்கு உத்தரவிட்டதன் அடிப்படையில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு,தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யும் நடவடிக்கை நடைபெற்று வருகிறது. ஜனநாயகத்தில் நான்கு தூண்களில் ஒன்றான பத்திரிக்கையை பொறுத்தளவு முத்தமிழ் அறிஞர் கலைஞர் எப்படி பாதுகாத்தாரோ அதன்படி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெளிவாக, உறுதியாக நடவடிக்கை எடுத்து வருகிறார். சட்டத்தின் அடிப்படையில் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றார்

Tags

Next Story