விவசாய பணிகள் மேற்கொள்வது குறித்து ஆய்வு

விவசாய பணிகள் மேற்கொள்வது குறித்து ஆய்வு
விவசாயம் குறித்து ஆய்வு
வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமங்களுக்கு சென்று விவசாயம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த தென்பள்ளிப்பட்டு அரவிந்தர் வேளாண்மை தொழில்நுட்ப கல்லூரியில் மாணவ-மாணவிகள் கிராம பகுதிகளுக்கு சென்று விவசாயிகளுடன் இணைந்து விவசாய பணிகள் மேற்கொள்வது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். விவசாயம் குறித்து ஆய்வு மதிப்பீடு என்னும் தலைப்பில் பருவகால நிலை அட்டவணை மற்றும் தினசரி அட்டவணைகளை கிராமப்புற மக்களுக்கு விரிவாக எடுத்துரைத்தனர். நிகழ்ச்சியில் பயிர் விளைச்சல் குறித்தும் , அதிக மகசூல் பெறுவது குறித்தும் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணியில் ஈடுபட உள்ளனர்.

Tags

Next Story