மதுக்கடைகள் குறைப்பதற்கான ஆய்வு: அமைச்சர் முத்துசாமி

மதுக்கடைகள் குறைப்பதற்கான ஆய்வு: அமைச்சர் முத்துசாமி

அண்ணா சிலைக்கு அமைச்சர் மரியாதை

மதுக்கடைகள் குறைப்பதற்கான ஆய்வுகள் நடந்துகொண்டு இருக்கிறது என அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்துள்ளார்.

பன்னீர்செல்வம் பூங்காவில் அறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் திருவுருவச் சிலைக்கு வீட்டுவசதி துறை மற றும் மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி , டாஸ்மாக் கடைகளில் அரசு விதித்த விலையை விட கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்க சுற்றறிக்கை இன்று அனுப்பட்டுள்ளது. மதுக்கடைகள் குறைப்பதற்கான ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கிறது என்றார்.

டி.ஆர் பாலு மற்றும் ஜெகத்ரட்சகன் ஆகியோரின் மதுக்கள் 44 விழுக்காடு பெறப்படுகிறது என அண்ணாமலை குற்றச்சாட்டுவது தவறானது. தேவையென்றால் பட்டியல் வெளியிடுவோம் என்றார்.

Tags

Next Story