துணை ஒழுங்கு முறை விற்பனை கூடம் தொடக்கம்!

துணை ஒழுங்கு முறை விற்பனை கூடம் தொடக்கம்!

 ஒழுங்கு முறை விற்பனை கூடம்

விவசாயிகளுக்கு நெல்லுக்கான தொகை வங்கிக் கணக்கு மூலமாக செலுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர் .
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த பெரிய கொழப்பலூரில் துணை ஒழுங்கு முறை விற்பனை கூடம் தொடங்கப்பட்டது.விவசாயிகள் 340 நெல் மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் வேளாண்மை இணை இயக்குனர் ஹரிகுமார், செயலாளர் சந்திரசேகர் மற்றும் ஒழுங்கு முறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் தினேஷ் கலந்து கொண்டு நெல்லுக்கான தொகையை வங்கி கணக்கு மூலமாக செலுத்தப்படும் என விவசாயிகளிடம் தெரிவித்தனர்.

Tags

Next Story