இடிந்து விழும் நிலையில் துணை சுகாதார நிலையம்

இடிந்து விழும் நிலையில் துணை சுகாதார நிலையம்

இடிந்து விழும் நிலையில் உள்ள சுகாதார 

இடிந்து விழும் நிலையில் துணை சுகாதார நிலையம் உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் ராஜாக்காபட்டியில் துணை சுகாதார நிலையம் உள்ளது.இங்கு ராஜகாபட்டி,கல்லுப்பட்டி,தீத்தாம்பட்டி, தம்பகுளத்துப்பட்டி, உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள் மருத்துவ பரிசோதனைகளுக்காக வந்து செல்கின்றனர். இங்கு கர்ப்பிணி பெண்கள், குழந்தைகளுக்கு தடுப்பூசி,பொது சுகாதார துறை சார்ந்த அனைத்து பணிகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் இந்த துணை சுகாதார நிலையம் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த கட்டிடம் சுமார் 40 வருடங்களுக்கு முன்னால் கட்டப்பட்டது.இதனால் இந்த சுகாதார நிலையம் தற்போது மிகவும் பழுதடைந்து இடியும் தருவாயில் உள்ளது.ஆகவே பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்னால் இந்த கட்டிடத்தை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story