திண்டிவனத்தில் பள்ளி மாணவர்களிடையே திடீர் மோதல்; வீடியோ வைரல்

திண்டிவனத்தில் பள்ளி மாணவர்களிடையே திடீர் மோதல்; வீடியோ வைரல்
திண்டிவனத்தில் பள்ளி மாணவர்களிடையே திடீரென மோதல் நடந்த நிலையில், இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அதிக அளவில் உள்ளன. இதில் காந்தி சிலை அருகே சில பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அவ்வப்போது மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ராஜாஜி வீதியில் உள்ள பள்ளி மாணவர் களுக்கிடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் ஒருவருக்கொருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான இந்த காட்சி தற் போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தியுள்ளது.

மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் எந்த வகுப்பை சேர்ந்தவர்கள்?, அவர்கள் எதற்காக மோதலில் ஈடுபட்டார்கள் என் பது குறித்து திண்டிவனம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். திண்டிவனம் பகுதியில் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருவதால் காலை, மாலை நேரங்களில் பள்ளிகள் அமைந்துள்ள பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Tags

Next Story