கல்லூரி மாணவர் திடீர் மரணம் : போலீஸ் விசாரணை!

கல்லூரி மாணவர் திடீர் மரணம் : போலீஸ் விசாரணை!

பைல் படம்

தூத்துக்குடியில் மது குடித்த கல்லூரி மாணவர் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடியில் மது குடித்த கல்லூரி மாணவர் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி சக்தி விநாயகர் புரம் முதல் தெருவைச் சேர்ந்தவர் இசக்கி பெருமாள் இசக்கி சுதாகர் (19). இவர் தூத்துக்குடியில் உள்ள கல்லூரியில் பிகாம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த அவர் தனக்கு தலை வலிப்பதாக கூறியுள்ளார்.

இதையடுத்து குடும்பத்தினர் அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து வடபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story