திருச்சி விமான நிலையத்தில் ஊழியர் திடீர் மரணம்

திருச்சி விமான நிலையத்தில் ஊழியர் திடீர் மரணம்

ஊழியர் திடீர் மரணம்

ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தவர் விமான நிலைய முனையத்தில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு
திண்டுக்கல், ராஜ் நகரைச் சேர்ந்தவர் ஏ.குட்டிராஜா ( வயது 27). இவர், திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இமிகிரேஷன் குடியேற்றப் பிரிவில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார். அவருக்கு விமானங்கள் புறப்பாடு பகுதியில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், அவர் விமான நிலைய முனையத்தில் திடீரென மயங்கி விழுந்தார். சக ஊழியர்கள் அவரை மீட்டு விமான நிலைய அவசர சிகிச்சை மற்றும் முதலுதவி சிகிச்சை முகாமிற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவக் குழுவினர், அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து விமான நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story