திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு போக்குவரத்து பணிமனை அருகே திடீர் தீ விபத்து

பல்லடம் அரசு போக்குவரத்து பணிமனை அருகே 10 ஏக்கர் விவசாய நிலத்தில் காய்ந்த புறங்களில் திடீர் தீ விபத்து. 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்த தீயணைப்பு துறையினர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் போக்குவரத்து பணிமனை அருகே 500 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள விவசாய நிலம் ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. காற்றின் வேகம் காரணமாக காட்டுத்தீ போல் பற்றி எரிய தொடங்கியது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் நிறைய அலுவலர் முத்துக்குமாரசாமி தலைமையிலான தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து சென்று இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்புத் துறையினரின் துரித நடவடிக்கையால் தீ மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதனிடையே இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பல்லடம் போலீசார் இந்த தீ விபத்திற்கு யாரேனும் புகைப்பிடித்து நெருப்புத் துகள்களை கவனக்குறைவாக வீசி சென்று விட்டனரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story