மதுரை அருகே வீட்டில் திடீர் தீ – தம்பதி சாவு !

மதுரை அருகே வீட்டில் திடீர் தீ – தம்பதி சாவு !

பலி

மதுரை அருகே கேஸ் கசிவால் வீட்டில் திடீர் தீ விபத்து ஏற்ப்பட்டதில் தம்பதி உயிரிழந்துள்ளனர்.

மதுரை அருகே உள்ள மாத்தூர் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 70). இவருடைய மனைவி பாண்டியம்மாள் (65). இவர்களது மகன் திருப்பூரில் வசித்து வரும் நிலையில், கணவன், மனைவி இருவரும் மாத்தூரில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் உள்ள சமையல் கேஸ் சிலிண்டரில் இருந்து கேஸ் கசிந்துள்ளது.இதையறியாத பாண்டியம்மாள் சுடுதண்ணீர் வைப்பதற்காக அடுப்பை பற்ற வைத்துள்ளார்.

அப்போது வீடு முழுவதும் தீப்பற்றியதில் பாண்டியம்மாள், அவரது கணவர் லட்சுமணன் ஆகிய இருவரும் உடல் கருகி பலத்த காயமடைந்தனர்.தம்பதி சாவுஇதையறிந்த அப்பகுதியினர் தீயை அணைத்து இருவரையும் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் இருவரும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அவர்களது மகன் பாலமுருகன் அளித்த புகாரின் பேரில் அப்பன்திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story