சாலையில் திடீர் பள்ளம்; முதியோர்கள் அவதி

சாலையில் திடீர் பள்ளம்; முதியோர்கள் அவதி

சிவகாசி அருகே சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டதால், பாதையை கடக்க முடியாமல் முதியோர்கள் அவதிப்படுகின்றனர்.  

சிவகாசி அருகே சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டதால், பாதையை கடக்க முடியாமல் முதியோர்கள் அவதிப்படுகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே சாலையில் ஏற்பட்டுள்ள திடீர் பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

சிவகாசி அருகே தச்சகுடி-தாழை பட்டி செல்லும் சாலை பழுதடைந்த நிலையில் காணப்பட்டது.அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு அங்கு புதிய தார் சாலை அமைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.இதில் ஒரு பகுதியில் தரைப்பாலத்தின் தடுப்பு சுவரில்,சமீபத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.இதையடுத்து,சாலை ஓரத்தில் திடீரென பள்ளம் உருவாகி உள்ளது. இந்த பள்ளத்தில் வாகனங்கள் செல்லும் போது, நிலை தடுமாறி கவிழும் நிலை உள்ளது. குழந்தைகளும் முதியவர்களும் தவறி விழும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, சாலை நடுவே ஏற்பட்டு இருக்கும் பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story