திடீர் ரெய்டு; உதவி செயற்பொறியாளர் கைது

திடீர் ரெய்டு; உதவி செயற்பொறியாளர் கைது

பல்லடத்தில் உள்ள மென்பொறியாளர் அலுவலகத்தில் நடந்த விஜிலென்ஸ் ரெய்டில், உதவி செயற்பொறியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

பல்லடத்தில் உள்ள மென்பொறியாளர் அலுவலகத்தில் நடந்த விஜிலென்ஸ் ரெய்டில், உதவி செயற்பொறியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

பல்லடம் மின்பொறியாளர் அலுவலகத்தில் திடீர் விஜிலென்ஸ் ரெய்டு. உதவி செயற்பொறியாளர் கைது! திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அண்ணா நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் தற்போது லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் சசிலேகா தலைமையில் 6 பேர் கொண்ட குழு ரெய்டு நடத்தினர்.இந்நிலையில் அண்ணா நகர் பகுதியில் வசிக்கும் பைஜ் அகமது என்பவரது இல்லத்தில் மின் இணைப்பு பெறுவதற்கு 5,௦௦௦ ரூபாய் உதவி மின் பொறியாளருக்கு லஞ்சமாக கொடுக்கும் போது ரசாயனம் தடவிய நோட்டுக்களை அலுவலகத்திற்குள்ளேயே கொடுத்ததில் கையும் களவுமாக சிக்கிக் கொண்டார்.

பல்லடம் நகர உதவி மின் பொறியாளர் சுரேஷ்பாபுவை கைது செய்து லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளர் சசிலேகா தலைமையிலான ஆறு பேர் கொண்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் உதவி மின் பொறியாளர் சுரேஷ்பாபுவை கைது செய்து சிறையில் அடைக்க உள்ளதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். Sent from my iPhone

Tags

Next Story