செஞ்சியில் திடீர் மழை - பெருக்கெடுத்து ஓடிய மழை நீர்

செஞ்சியில் திடீர் மழை - பெருக்கெடுத்து ஓடிய மழை நீர்

சாலைகளில் தேங்கி நிற்கும் மழைநீர் 

செஞ்சியில் நேற்று மாலை பெய்த கனமழையால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது.

செஞ்சியில் நேற்று காலை முதல் கடும் வெயில் வாட்டியது. மாலை 6 மணியளவில் திடீரென பலத்த மழை பெய்ய தொடங்கியது. சுமாா் ஒரு மணி நேரம் நீடித்த இந்த மழையால் செஞ்சி காந்தி பஜாா், பேருந்து நிலையம், கூட்டுச் சாலை ஆகிய இடங்களில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது.

இதேபோல, திருவண்ணாமலை சாலை மற்றும் செஞ்சி கூட்டுச் சாலை உள்ளிட்ட இடங்களில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், பள்ளி மாணவா்கள் பெரும் அவதிக்குள்ளாகினா்.காந்தி பஜாா் மற்றும் திருவண்ணாமலை சாலையில் அண்மையில் வடிநீா் கால்வாய்கள் அமைக்கப்பட்டன.

ஆனால், கால்வாய்கள் தூா் வாராமல் இருப்பதாலும், தண்ணீா் செல்லும் வழிகள் குப்பைகளால் அடைபட்டு இருப்பதாலும் சாலையில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடுகிறது.எனவே, செஞ்சி பேரூராட்சி நிா்வாகம் வடிநீா் கால்வாய்களை தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Tags

Next Story